மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகம் ஜல் ஜீவன் மிஷன்: ஸ்வச் ஜல் சே சுரக்சா (SJSS) என்றப் பிரச்சாரத்தின் கீழ் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
இந்தப் பிரச்சாரம் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இது மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை (UTs) முதன்மைப்படுத்தி நீரின் தர கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட வலியுறுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் பிரச்சாரத்தின் போது கிடைக்கப் பெற்ற 90.34% அளவிலான மாசுபட்ட மாதிரிகளை மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களாக உருவெடுத்துள்ளன.