TNPSC Thervupettagam

ஸ்வச் வித்யாலயா புரஸ்கார் விருதுகள்

September 20 , 2018 2161 days 637 0
  • மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமானது ஸ்வச் வித்யாலயா புரஸ்கார் 2017-18 விருதுகளை புதுடெல்லியில் வழங்கியது.
  • இது 2018 செப்டம்பர் 15 அன்று பிரதம மந்திரி ஸ்வச்சத்தா ஹை சேவா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வழங்கப்பட்டது.
  • இந்த ஆண்டு முதன்முறையாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமல்லாது தனியார் பள்ளிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.
  • கீழ்க்காண்பனவற்றிற்கு அதிகபட்ச ‘தேசிய ஸ்வச் வித்யாலயா புரஸ்கார் விருது’ பெற்ற பள்ளிகளை கொண்டுள்ளதற்காக அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்பட்டது
    • புதுச்சேரி, தமிழ்நாடு, குஜராத், ஆந்திரப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்கள்.
    • பாண்டிச்சேரி, ஸ்ரீகாகுளம், சண்டிகார், ஹிசார், காரைக்கால், லதூர், நெல்லூர், தெற்கு கோவா, வடோதரா ஆகிய 9 மாவட்டங்கள்
  • ஸ்வச் வித்யாலயா புரஸ்கார் விருதானது, நீர், சுகாதாரம் மற்றும் தூய்மை ஆகியவற்றில் முன்மாதிரியான வேலைகளைச் செய்துள்ள பள்ளிகளை கௌரவிப்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்