TNPSC Thervupettagam

ஸ்வஸ்த் பாரத் யாத்ராவின் கீழ் விருதுகள்

January 31 , 2019 1996 days 643 0
  • FSSAI-ன் ஸ்வஸ்த் பாரத் யாத்ரா என்ற திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக சிறந்த மாநிலத்திற்கான விருதை தமிழ்நாடு வென்றுள்ளது.
  • இந்த திட்டத்தின் கீழ் மதுரை மற்றும் சிவகாசி ஆகியவை தமிழ்நாட்டின் சிறந்த மாவட்டங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (FSSAI - Food Safety and Standards Authority of India) “இந்தியாவில் சரியானவற்றை உண்போம்” என்ற முன்முயற்சியை விரிவாக்கம் செய்வதற்காக ஸ்வஸ்த் பாரத் யாத்ராவைத் துவங்கியது.
  • இது ஒரு 100 நாட்கள் நீண்ட, நுகர்வோர் அனைவரையும் சென்றடைவதை நோக்கமாக கொண்ட திட்டமாகும்.
மற்ற விருதுகள்
  • 3 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை உடைய சிறந்த மாநிலங்கள் - குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா.
  • 3 கோடிக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட சிறந்த மாநிலங்கள் -பஞ்சாப், கோவா மற்றும் டெல்லி
  • சிறப்பு விருதுகள் - மேகாலயா, ஜம்மு மற்றும் காஷ்மீர் & உத்தரகாண்ட் (மலைப்பாங்கான மற்றும் கடினமான நிலப்பரப்பை பெற்றிருக்கும் போதிலும் சிறந்த பங்களிப்பு)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்