நாடு கடத்தப்பட்ட பெலாரஸ் நாட்டின் அரசியல் எதிர்க் கட்சித் தலைவர் ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்கயா உரிமைப் பரிசினை வென்றுள்ளார்.
ஜனநாயகத்திற்காக வேண்டி "அயராது" உழைத்த, படுகொலை செய்யப்பட்ட, ஸ்வீடன் நாட்டினைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர் அன்னா லிண்ட் அவர்களின் நினைவாக இந்த பரிசு வழங்கப்படுகிறது.
புறக்கணிப்பு, பாகுபாடு, அடக்குமுறை மற்றும் அநீதி ஆகியவற்றிற்கு எதிரான செயல் பாடுகளில் துணிவுடன் செயல்படும் முன்னணிப் பெண்கள் மற்றும் இளையோர்களை ஊக்குவிப்பதற்காக இந்தப் பரிசானது வழங்கப்படுகிறது.