அண்மையில் டெஹ்ரானில் நடைபெற்ற ஹார்முஸ் அமைதி முன்னெடுப்பு நிகழ்ச்சியில் இந்தியா கலந்து கொண்டது.
இந்த முன்னெடுப்பானது அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெறும் பதட்டங்களுக்கு மத்தியில் உலகின் பரபரப்பான கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை அமைதிப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
இதில் ஈரானின் முன்னணி வர்த்தகப் பங்காளர் நாடுகளான சீனா, ஓமன், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவையும் கலந்து கொண்டன.
ஹார்முஸ் ஜலசந்தியானது உலகின் மிக முக்கியமான போக்குவரத்துப் பகுதியாக விளங்குகின்றது.
இந்த ஜலசந்தியானது பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கின்றது.
இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு எண்ணெய் இறக்குமதியும், திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) இறக்குமதியில் பாதியும் இந்த ஜலசந்தி வழியாக நடைபெறுகின்றது.