ஒடிசாவில், காய் என்ற சட்னிக்குப் புவிசார் குறியீடு விளக்கத்தினை உருவாக்கச் செய்வதற்காக வேண்டி அறிவியலாளர்கள் தங்கள் பகுப்பாய்வை நல்ல முறையில் மேற்கொண்டு வருகின்றனர்.
சிஞ்சிருக்கான் அல்லது தையற்கார எறும்புகளிலிருந்துத் தயாரிக்கப்படும் உணவுகள் ஒடிசா பழங்குடியினர் மத்தியில் பல நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கின்றன.
காய் என்ற சட்னியில் மிக அற்புதமானப் புரதங்கள், துத்தநாகம், கால்சியம், இரும்பு, உணவு சார்ந்த B-12, பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம், சோடியம், நார்ச்சத்து மற்றும் 18 அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், நோய்களைத் தடுக்கவும் இது மிக அதிக ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தையற்கார எறும்புகள் அறிவியல் ரீதியாக ஓகோபில்லா ஸ்மரக்டினா என்று அழைக்கப் படுகின்றன.