பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியரான டேவிட் டியூப் அவர்களுக்கு “At Night All Blood is Black” எனும் புத்தகத்திற்காக மதிப்புமிக்க “சர்வதேச புக்கர் பரிசு” வழங்கப் பட்டுள்ளது.
பாரீசில் பிறந்த இவர் இந்தப் பரிசினை வென்ற முதல் பிரெஞ்சு நாட்டவர் ஆவார்.
இந்தப் புத்தகமானது முதன்முறையாக 2018 ஆம் ஆண்டில் பிரஞ்சு மொழியில் வெளியானது.
இந்தப் புத்தகத்தினை மொழிபெயர்த்த அனா மோஸ் சோவாகிஸ் அவர்களுக்கு இந்தப் பரிசுத் தொகையான 50000 யூரோக்களில் (70,850 டாலர்) பாதியளவுத் தொகையானது வழங்கப் பட்டது.