“சாம்பல்” நிறப் பட்டியலில் பாகிஸ்தான்
October 17 , 2020
1410 days
578
உலகளாவிய தீவிரவாத நிதிக் கண்காணிப்பு அமைப்பான நிதியியல் நடவடிக்கை படைக் குழுவானது (FATF - The Financial Action Task Force) பாகிஸ்தான் நாட்டை “ சாம்பல் நிறம் ” என்ற பட்டியலில் வைக்க முடிவு செய்துள்ளது .
இது அந்த நாடு எல்இடி (LeT) மற்றும் ஜெஇஎம் (JeM) போன்ற தீவிரவாதக் குழுக்களுக்கான நிதி ஓட்டத்தைச் சரிவர கண்காணிக்கத் தவறியுள்ளது என்று கூறி உ ள்ளது .
இந்த முடிவானது கோவிட் – 19 நோய்த் தொற்றின் காரணமாக காணொலி வாயிலாக நடத்தப்பட்ட FATF- ன் மூன்றாவது மற்றும் இறுதி அமர்வின் போது மேற்கொள்ளப் பட்டுள்ளது .
இந்த முழு அமர்வானது சீனாவின் தலைமையில் , அதாவது ஜியாங்மின் லியூ என்பவரது தலைமையில் நடைபெற்றது .
FATF- ன் ஆசியப் பசிபிக் குழுவானது பாகிஸ்தானை அதன் “ மேம்படுத்தப்பட்ட தொடர் கண்காணிப்பு ” (Enhanced Follow-up) பட்டியலில் மீண்டும் வைத்துள்ளது .
Post Views:
578